Home

Thursday, February 24, 2011

Lyrics:குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

படம் : கோ

பாடல் : குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

இயக்கம் : கே வி ஆனந்த்

______________________________

என்னமோ ஏதோ

எண்ணம் திரளுது கனவில்

வண்ணம் பிறழுது நினைவில்

கண்கள் இருளுது நனவில்


என்னமோ ஏதோ

முட்டி முளைக்குது மனதில்

வெட்டி எறிந்திடும் நொடியில்

மொட்டு அவிழுது கொடியில்


ஏனோ

குவியமில்லா...

குவியமில்லா ஒரு காட்சிப் பேழை!

ஏனோ

உருவமில்லா...

உருவமில்லா நாளை!


ஏனோ

குவியமில்லா...

குவியமில்லா ஒரு காட்சிப் பேழை!

ஏனோ அரைமனதாய்

விடியுது என் காலை!


என்னமோ ஏதோ

மின்னிமறையுது விழியில்

அண்டிஅகலுது வழியில்

சிந்திச் சிதறுது வெளியில்


என்னமோ ஏதோ...

சிக்கித் தவிக்குது மனதில்

ரெக்கை விரிக்குது கனவில்

விட்டுப் பறக்குது தொலைவில்


ஏனோ குவியமில்லா

குவியமில்லா - ஒரு காட்சிப் பேழை!

ஏனோ உருவமில்லா

உருவமில்லா நாளை!


நீயும் நானும் எந்திரமா?

யாரோ செய்யும் மந்திரமா?

பூவே!

______________________


முத்தமிட்ட மூச்சுக் காற்று

பட்டுப் பட்டுக் கெட்டுப்போனேன்

பக்கம் வந்து நிற்கும் போது

திட்டமிட்டு எட்டிப் போனேன்


நெருங்காதே பெண்ணே எந்தன்

நெஞ்செல்லாம் நஞ்சாகும்


அழைக்காதே பெண்ணே எந்தன்

அச்சங்கள் அச்சாகும்


சிரிப்பால் எனை நீ

சிதைத்தாய் போதும்

______________


சுத்திச் சுத்தி உன்னைத் தேடி

விழிகள் அலையும் அவசரம் ஏனோ?


சத்த சத்த நெரிசலில் உன் சொல்

செவிகள் அறியும் அதிசயம் ஏனோ?


கனாக்காணத் தானே பெண்ணே

கண்கொண்டு வந்தேனோ?


வினாக்கான விடையும் காணக்

கண்ணீரும் கொண்டேனோ?


நிழலை திருடும்

மழலை நானோ?

_______________________


No comments:

Post a Comment